என்னுரை..
புத்தகம் : என் இனிய இயந்திரா...
எழுத்தாளர்:சுஜாதா
என் மதிப்பீடு : 5.0 / 10.0
நான் படித்த முதல் Science Fiction கதை.
"எந்திரன்" படம் பார்த்த பிறகு படித்தது.
எந்திரன் கதை வேறொருவருடைய கதை என்று "ஷங்கர்" மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
எனக்கென்னவோ அது இந்த புத்தகத்திலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.
கதை எழுதப்பட்டது எண்பதுகளில்..
2021 ஆண்டில் நடப்பதாக...
வீட்டில் காஃபி போடுவதிலிருந்து, நாட்டை ஆள்வது வரை எல்லாம் இயந்திர மயமாகி போனது நம் நாட்டில்...
அங்கே எல்லாம் கட்டுபடுத்தப்படுகிறது,
மனித உணர்ச்சிகள், பெயர், பிறப்பு, இறப்பு, கலைகள், பொழுதுபோக்கு, மகப்பேறு, ஒழுங்கீனம்....
இங்ஙனம் கட்டுபடுத்தப்பட்ட நாட்டில் நிலா - சிபி தம்பதியர் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி(?) கிடைக்கிறது. அன்றைய தினமே சிபி காணாமல் போகிறான்.
சிபியை தேடி அலையும் நிலாவிற்கு, ரவி என்பவனும், நாய் என்று அழைத்தால் கோபப்படும் அவனது இயந்திர நாய் "ஜீனோ"வும் உதவி செய்கின்றனர்.
ஜீனோ-நிலா கூட்டணி செய்யும் சாகசங்ளையும், கடக்கும் சோதனைகளையும் விவரிக்கும் கதை இது.
கதை, வருங்காலத்தில் இயந்திரத்தின் அவசியங்களையும், அனாவசியங்களையும் ஒருங்கே புரிய வைக்கிறது.
கதையின் நாயகன் ஜீனோ.
தனது இயந்திர வெள்ளந்தித்தனத்தால், புத்திசாலித்தனத்தால், தன் சக்திக்கு மீறிய சாகசத்தால், ஞாயபக சக்தியால், நம்மை அடிமை ஆக்கி விடுகிறது.
அந்த இயந்திரத்தின் அறிவுத் தாகத்தை தான் என்னவென்று சொல்வது.
சாகப்போகும் நேரத்திலும் அதற்கு படிக்க புத்தகம் வேண்டும்.
அடுத்த ஜென்மத்தில் நான் ஜீனோவாக பிறக்க ஆசை.
வலி இல்லை, பசி இல்லை, தூக்கம் தேவையில்லை...
படிப்பதற்கு புத்தகம் மட்டும் இருந்தால் போதும்.
இடையில் பயம் என்ற உணர்ச்சியில் தொடங்கி மனித உணர்ச்சிகளையும் கற்றுக் கொண்டு விடுகிறது ஜீனோ.
(எந்திரனிலும் "சிட்டி", கோபம் என்ற உணர்ச்சியின் மூலம் மனித உணர்ச்சிகளை கற்றுக் கொண்டு விடுகிறான்)
நிலா, சிபி, ரவி எல்லோரும் நம்மிடயே உலவும் சாதாரன மனிதர்கள்.
சுஜாதா நம்மை வேறு ஒரு தேசத்திற்கு கொண்டு சென்று விடுகிறார். அதுவும் இந்த கதை வெளி வந்த நேரத்தில் படித்திருந்தால்!!! (1980's)
11வது அத்தியாயம் நீங்கலாக புத்தகத்தை எல்லோரும் படிக்கலாம். 11-க்கு மட்டும் 'A' சான்று.
இந்த நாவல் படிக்கும் முன்பு, சுஜாதாவின் "கற்றதும், பெற்றதும்", "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" படித்திருக்கிறேன்.
அவரை ஒரு மமதை பிடித்தவர் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது புரிகிறது. அது மமதை தான், ஆனால் இளையராஜா, பாரதிராஜா போன்ற திறமையுள்ளோர் கொண்டிருக்கும் நியாமான உணர்வு அது.
சுஜாதா அவர்கள் கதையில் கூறியுள்ளது போல 2020-ஆம் ஆண்டிலேயே நடந்து விட வாய்ப்பில்லை. ஆனால் கண்டிப்பாக விரைவில்..
கதையின் இரண்டாம் பாகம் "மறுபடியும் ஜீனோ" படிக்க போகிறேன், மறுபடியும் ஜீனோவை சந்திக்கும் ஆவலோடு...